0 0
Read Time:1 Minute, 45 Second

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் காவலர்களுக்கு முகக்கவசம் கிருமிநாசினி வழங்கப்பட்டது!

கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக புவனகிரி மற்றும் மருதூர் காவல் நிலையங்களில் பணி புரியும் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் போலீசாருக்கு முககவசம் , கிருமிநாசினி ஆக்ஸிபல்ஸ்கருவி, மற்றும் பிரியாணி பொட்டலங்கள் போன்றவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார் இளைஞரணி அமைப்பாளர் நடராஜன் வரவேற்றார் கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் கலந்துகொண்டு புவனகிரி மருதூர் காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களுக்கு வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர் சர்க்கரை, முருகன் ,அரவிந்தன், ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன்,நகர இளைஞரணி எழில் வேந்தன்,உள்பட காவல் நிலைய காவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள் முடிவில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %