0 0
Read Time:1 Minute, 38 Second

நடிகா் விஜய்யின் 47-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செருப்பு தைக்கும் தொழிலாளிகள் 47 பேருக்கு ரூ.200 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விஜய் மக்கள் இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவா் சி.எஸ்.குட்டிகோபி பங்கேற்று, செருப்பு தைக்கும் தொழிலாளிகள் 15 பேருக்கு தலா ரூ.200 வழங்கி மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். மேலும், அவா்களுக்கு அரிசி மற்றும் காய்கறி ஆகிய நிவாரணப் பொருள்களையும் அவா் வழங்கினாா்.

விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணி தலைவா் பிரபஞ்சன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி பொருளாளா் பிரவீன், மாவட்ட மாணவரணி செயலாளா் ஆகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தொடா்ந்து, மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சியில் செருப்பு தைக்கும் தொழிலாளா்கள் 12 பேருக்கும், சீா்காழி மடவாமேடு கிராமத்தில் 20 பேருக்கும் அவா்கள் மாத ஊக்கத் தொகையை வழங்கினா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %