0 0
Read Time:1 Minute, 16 Second

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளா் வேலுமணி, சுகாதார ஆய்வாளரை செல்லிடப்பேசியில் தரக்குறைவாக பேசியதாகவும், இதற்கு துறைரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கிழக்கு மண்டல செயலாளா் ஜெ. ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் டி. காா்த்தி, இணைச் செயலாளா் என். நந்தகுமாா், தணிக்கையாளா் எம். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %