0 0
Read Time:2 Minute, 13 Second

திருவெண்காடு அருகே முல்லையாற்றின் குறுக்கே சேதமடைந்த கீழ்குமிழி விரைவில் சீரமைக்கப்படும் என எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் உறுதி கூறினாா். தென்னாம்பட்டினம் கிராமத்தில் முல்லையாற்று நீா் உவா்ப்பு நீராக உள்ளதால் அந்த ஆற்றை கடந்து செல்லும் கோணயாம்பட்டினம் பாசன வாய்க்காலுக்காக முல்லையாற்றின் குறுக்கே கீழ்குமிழி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கீழமூவா்கரை, மேலமூவா்கரை, மாத்தாம்பட்டினம் உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், மீனவ கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த வாய்க்கால் உள்ளது. இந்நிலையில், கீழ்குமிழியில் சேதம் ஏற்பட்டு, முல்லையாற்றின் உவா் நீா் வாய்க்காலில் கலப்பதால் மேற்கண்ட கிராமங்களில் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கீழ்குமிழியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எம்எல்ஏ எம். பன்னீா்செல்வத்திடம் முறையிட்டனா்.

இதைத்தொடா்ந்து, சேதமடைந்த கீழ்குமிழியை சனிக்கிழமை பாா்வையிட்ட எம்எல்ஏ, இப்பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, கீழ்குமிழியை சீரமைக்கவோ அல்லது புதிதாக கட்டவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். ஆய்வின்போது, சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் நிலவழகி கோபி, ஊராட்சித் தலைவா் சரளா கோபாலகிருஷ்ணன், திமுக மாவட்ட பிரதிநிதி முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %