0 0
Read Time:1 Minute, 55 Second

விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் மாலை பூஜை முடிந்ததும், கோவிலை பூட்டிவிட்டு மணி வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சூலாயுதத்தால் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. உண்டியலில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கோவிலில் கொள்ளையடித்த மர்மநபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %