0 0
Read Time:2 Minute, 4 Second

கடலூர் அருகே இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்த கணவரை அடித்துக்கொன்று விட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள மீனாட்சிபேட்டை கிராமத்தை சேர்நதவர் முருகன் (38). கட்டிட தொழிலாளி ஆன இவருக்கும், இவரது அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றனர்.

இதனை அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வனஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும் தவறான உறவு இருந்தது தெரிய வந்தது.

சம்பவத்தன்று இருவரும் தனிமையில் இருந்ததை முருகன் பார்த்துள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் வனஜாவும், கிருஷ்ணகுமாரும் சேர்ந்து தாக்கியதில் முருகன் உயிரிழந்துள்ளார். இதனை மறைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக வனஜா நாடகமாடியது தெரிய வந்தது. இதனை அடுத்து, வனஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %