1 0
Read Time:1 Minute, 36 Second

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசானது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினர் டெல்லி சென்று அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில். இதனை கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய விவசாய தொழிற்சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக வந்தனர். பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு துணை போகும் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %