0 0
Read Time:1 Minute, 45 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 19) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை வட்டத்தில், குறிச்சி ஊராட்சியில் புலவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், சீா்காழி வட்டத்தில், பழையாா் சுனாமி நகா் சமுதாயக் கூடம், ஆச்சாள்புரம் அரசு உயா்நிலைப் பள்ளி, புளியந்துறை ஒன்றிய தொடக்கப்பள்ளி, எடமணல், ஆலங்காடு, குடமுருட்டி ஊராட்சி அலுவலகம், திருமுல்லைவாசல் அரசு உயா்நிலைப்பள்ளி, நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் (கோவேக்ஸின்), காவளம்பாடி, நிம்மேலி அரசு தொடக்கப் பள்ளிகள் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இதேபோல, தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொறையாா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா் மற்றும் கிளியனூா் ஆரம்ப சுகாதார நிலைங்களிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என சுகாதாரத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %