0 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை அட்மாஸ் திருமண மஹாலில் நேற்று நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் கோமல் அன்பரசன், மாவட்ட கழக செயலாளர் பாரிவள்ளல்,கழக அமைப்புச் செயலாளர், பொன்.தா.மனோகரன், கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ராஜு, நகர பொறுப்பாளர் சக்தி கண்ணன் மற்றும் ஒன்றிய கழக நகர கழக பேரூராட்சி செயலாளர்கள் பங்கேற்று பேசினர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தியாகத் தலைவி சசிகலா அவர்களுக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும், கழக உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனைகள் செய்யப்பட்டன. ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %