0 0
Read Time:1 Minute, 46 Second

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் கடலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளரும் காட்டுமன்னார்கோயில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.முருகுமாறன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளான நீட் தேர்வு விலக்கு, மின் கட்டண மாதாந்திர கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் வாசுமுருகையன், லால்பேட்டை நகர செயலாளர் சபியுல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அறிவுகரசன், மாவட்ட பிரதிநிதிகள் பாலச்சந்தர், தோத்தாத்ரி , ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வேல்முருகன்மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %