0 0
Read Time:2 Minute, 26 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டசெம்பனார்கோயில் ஒன்றியம் திருவிளையாட்டம் சௌரிராஜன் உயர்நிலைப்பள்ளி மற்றும் குத்தாலம் ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பாக நடத்தப்பட்ட கொரனோ தடுப்பூசி முகாமில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் கலந்துகொண்டு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி பேசினார். மேலும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு சபதம் ஏற்றனர்.

நிகழ்ச்சியில் செம்பை ஒன்றிய குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மருத்துவர்கள் கார்த்திக் சந்திரகுமார், மதன்ராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செம்பை ஒன்றியம் மஞ்சுளா, குத்தாலம் ஒன்றியம் சரவணன், சரவணன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மங்கை உமாசங்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் தரங்கம்பாடி வெங்கடேசன், குத்தாலம் அமிர்த குமார், மயிலாடுதுறை தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %