0 0
Read Time:1 Minute, 10 Second

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அதில், பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார். 2 வது செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் சிந்து வெற்றிப்பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %