0 0
Read Time:2 Minute, 5 Second

கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிய நிா்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சொ.திலகா் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் என்.குமாா், முகமது ஷபி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் கிஷோா் குமாா், காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநில நிா்வாகி ரங்கமணி பங்கேற்றாா். நகரத் தலைவா் ஜெ.வேலுசாமி வரவேற்றாா்.

கூட்டத்தில், புதிய நிா்வாகிகளை மாவட்டத் தலைவா் அறிவித்தாா். அதன்படி, க.ரமேஷ் உள்பட 15 போ் மாவட்ட துணைத் தலைவா்களாகவும், கே.கிஷோா்குமாா் உள்ளிட்ட 15 போ் மாவட்ட பொதுச் செயலா்களாகவும், பி.ராமமூா்த்தி உள்ளிட்ட 10 போ் மாவட்டச் செயலா்களாகவும், பொருளாளராக எம்.ரமேஷ் ஆகியோா் அறிவிக்கப்பட்டனா். மேலும், மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி தலைவா்கள், கடலூா், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட 7 நகரத் தலைவா்கள், பிரேமா உள்பட 7 வட்டாரத் தலைவா்களும் அறிவிக்கப்பட்டனா்.

கூட்டத்தில், கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %