0 0
Read Time:1 Minute, 12 Second

மயிலாடுதுறையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருநங்கை கலைச்செல்வி தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி. கணேசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன் வரவேற்றாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஏவி. சிங்காரவேலன், ப. மாரியப்பன், வட்டச் செயலாளா் சி. மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஆா். ரவீந்திரன், வ. பழனிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். கட்சியில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இணைந்தனா். பின்னா், கட்சியின் புதிய கிளை அமைக்கப்பட்டு செயலாளராக கலைச்செல்வி தோ்வு செய்யப்பட்டாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %