0 0
Read Time:1 Minute, 38 Second

கடலூர்: சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவரது வீட்டை சுற்றி புதர்கள் மண்டிக்கிடிப்பதால், பாதுகாப்பிற்காக ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார்.இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் நல்ல பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட மூன்று நாய்கள் பாம்பை சூழ்ந்து கொண்டு, சண்டையிட்டுள்ளன. பாம்பும் சளைக்காமல் நாய்களிடம் சண்டையிட்டது.அதில், பாம்பு மூன்று நாய்களையும் கொத்தியது. நாய்களும் பாம்பை கடித்து குதறின. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒன்றன் பின், ஒன்றாக நாய்கள் சுருண்டு விழுந்து இறந்தன. காயமடைந்த பாம்பும் இறந்தது.இதனால் நாய் உரிமையாளரின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், பாம்பையும், நாய்களையும் பார்க்க திரண்டதால் பரபரப்பு நிலவியது. பின்., அதே பகுதியில் பாம்புடன், நாய்களும் சேர்த்து புதைக்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %