0 0
Read Time:1 Minute, 37 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நல நீதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செம்பனார்கோயில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நல சங்க செயலாளர் கே ராஜேந்திரன் தலைமை வகித்தார் மாநில துணைத்தலைவர் ராஜமோகன் முன்னிலை வகித்தார் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஏழு நபர்களுக்கு குடும்ப நல நிதியாக டிஎன்சிஎஸ்சி, ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் காசோலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள் வீரசுந்தரம், ஞானசேகரன், கணேசமூர்த்தி மற்றும் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %