0 0
Read Time:1 Minute, 39 Second

விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், அடுத்தத் தவணை நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி நிதி உதவி, வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் அடுத்த தவணை நிதியை இன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கிறார். இதன்படி 9 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %