0 0
Read Time:2 Minute, 25 Second

கள்ளக்குறிச்சி:டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கி குடித்த மது பிரியருக்கு, மூக்கில் ரத்தம் வந்ததால், பீதி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட விருகாவூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடையில் முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த சாமித்துரை என்பவர் மகன் செந்தில் என்பவர் இன்று மதியம், ரூ.150 மதிப்புள்ள மதுபானம் ஒன்றை வாங்கி குடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மது குடித்த உடனே மூக்கிலிருந்து அவருக்கு ரத்தம் பீறிட்டு வடிந்துள்ளது. இதைக் கண்டு செந்தில் அச்சமடைந்து உள்ளார். எனவே சக குடிகாரர்கள், தங்கள் மதுப்பாட்டிலை மேலும் கீழும் உற்று பார்த்துள்ளனர். அப்போது ஒவரிடம் இருந்த மதுபான பாட்டிலில் குப்பை மற்றும் பூச்சி இருந்தாக சொல்லப்படுகிறது.

இதனால் பயந்துபோன செந்தில் சேல்ஸ்மேனிடம் இதுபற்றி கேட்டுள்ளார். ஆனால் அங்கு வாக்குவாதம் ஏற்படவே பரபரப்பு நிலவியது. இதனால் வரஞ்சரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் மோதல் ஏதும் நடக்காமல் இருக்க மதுபான கடையை மூடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மூக்கில் ரத்தம் வரப்பட்ட செந்தில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மதுபானம் குடித்தவருக்கு மூக்கிலிருந்து ஏன் ரத்தம் வந்தது என்பது மர்மமாக இருக்கிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %