0 0
Read Time:53 Second

திட்டக்குடி அருகே ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திட்டக்குடி அருகே உள்ளது பெருமுளை கிராமம். இங்கு, சுமாா் 80 ஏக்கா் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையைச் சுற்றிலும் பனை விதைகளை நடவு செய்வது குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் அறிவு, கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் விளக்கினாா்.

முதல் கட்டமாக புதன்கிழமை சுமாா் 500 பனை விதைகள் ஊராட்சி அமைப்பு சாா்பில், பெண்களால் விதைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மேலும் 500 பனை விதைகளை நடவு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %