0 0
Read Time:1 Minute, 41 Second

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், முதல் திருமணத்தை மறைத்து தனது ஆட்டோவில் அடிக்கடி பயணம் செய்யும் சித்தலப்பாடி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ராஜா, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

தற்போது அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜாவிடம் சென்று, அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜா, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்றும், அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %