0 0
Read Time:1 Minute, 11 Second

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு விசிக சார்பில் மரக்கன்று நடும்விழா இன்று நடைபெற்றது.

முன்னாள் விசிக மாவட்ட செயலாளர். ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விசிக நிர்வாகிகள் எஸ்.கலியமூர்த்தி, வழக்கறிஞர் பூபாலன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கரன்பந்தல் கடைவீதியில் மரக்கன்று நட்டு வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.

இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வ. கலைவண்ணன், ரமேஷ், எழுச்சி மணி, ஆ.பாலாமணி, ராஜ்கண்ணன், தினேஷ் வளவன், பாலமுருகன், பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %